இரவு நேரத்தில் திடீரென ஓவியா செய்த செயல் வைரலாகும் புகைப்படம்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா.
தற்போது இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பும் கிடைத்துவருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். இவரது மார்க்கெட் எகிறியதால் தற்போது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.
இப்போதும் ஓவியா எங்கு சென்றாலும் ஓவியா.... ஓவியா என்று சொல்லாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் நடிகை ஓவியா தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அங்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் சின்ன குழந்தையையும் தூக்கிக் கொண்டு விளையாடி உள்ளார்.
அப்போது அவர்கள் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Comments
Post a Comment